Wednesday, July 29, 2009

1

காதல்

பத்து மாதம்
சுமந்து பெற்றவள்
தாய்எனில்
இத்தனை வருடமாய்
உன்னை சும்மந்து
கொண்டு இருக்கும்
என்னை என்னெவென்று
அழைப்பாய்!

1

குழந்தை

கால் வலிக்கும்
வரை.........
உன் வீரல்!
பிடித்து நடக்க
வேண்டும்!
இரண்டு
வயது
குழந்தையாக!...........

0

புன்னகை

ஒரு மழை கால மாலை நேரத்தில்........
நான் குடையுடன் நடக்கையில்.......
நீயோ புன்னகையுடன் மழையில் நடந்தாய்.......
ஹையோ.... மின்னல்........
பிறகு தான் தெரிந்தது மின்னல் மழையினால் அல்ல
உன் புன்னகைய்னால் என்று............
யார் சொன்னது....?
மின்னலில் இருந்து
மின்சாரம் எடுக்க முடியாது என்று......?

0

தவம்

ஆயிரம் துறவிகள் வந்தாலும்.....
என் தவத்திற்கு இடு ஆகாது
அவர்களது தவ வலிமை.....
ஏன் என்றால்......
நான் வரமாய் பெற்றது
உன் அன்பையும்........
உன் விழியோர சிரிப்பையும்......

Monday, July 27, 2009

0

நீ

நனைந்த என் விழிகளை
நாசுக்காக துடைத்துவிட்டு
பூட்டிய என் இதழ்களில்
புன்னகையை மலரவிட்டு
நல்லவற்றை
நையாண்டியாய் எடுத்துரைத்து
நான்கு பக்கம் நான் உண்டு என்று
நம்பிக்கை தரும் உறவாய்
நீ........................

Friday, July 24, 2009

0

யாரடா நீ ?

யாரடா.........நீ என்னக்கு...........?

என் உயிரை களவாடிய
களவான.........?
இல்லை...விழிகளால்
உயிர் தீண்ட வந்த
காதலனா...........?
இல்லை....என் உயரில்
பாதி(பதி)யாக வந்த......
...................?
யாரடா நீ .............?

0

என் மனம்

என்ன விரட்டினாலும் விடாமல்
காலை சுற்றும்
நாய் குட்டி போல.....
என் மனம்.......
உன்னையே சுற்றுகிறதே......!
ஏய் பயப்படதே.....
இந்த பப்பி..........
உன்னை எதுவும் செய்துவிடாது.......
உன் காலை சுற்றி
வாலை ஆட்டுவது தவிர...........

Thursday, July 23, 2009

0

ரசிகன்

ஒரு நாள்
நீ உன் தங்கையின்
தோழிகளுடன்
"கண்ணாம்பூச்சி"
விளையாடிகொண்டிருதாய்.
அப்போது பெய்தா
எதிர்பாராத மழையில்
உன் தோழிகள்
"ஐயோ மழை !"
என்று சிதறி ஓடினார்கள்....
நீ மட்டும்,
"அய் மழை!"
என்று மழையில்
நனைந்தாய்.
அன்றுதான் முதன்முதலில்
ரசிக்கஆரம்பித்தேன்
மழையையும், உன்னையும்!

Wednesday, July 22, 2009

1

உன்னை நினைத்து

நீ இல்லாமலேயே
உன்னோடு
வாழ்ந்து
கொண்டுஇருக்கிறேன்
விரும்பினால்
நீயும் வந்து
வாழ்ந்து
கொளளலாம்..................


எதைக் கேட்டாலும்
வெட்கத்தையே தருகிறாயே
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்..........?


நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்
சம்மதம் மட்டும் சொல்
உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்.............

தன நிழலை
தானே சுமக்கும் தஞ்சை கோபுரம் போலே
உன்னை நான் சுமப்பேன்..........

Tuesday, July 21, 2009

0

காதலியின் ஆசை

ஏழு பிரவிஎளும்
தொடருமோம்
திருமண பந்தம்........
இது நமக்கு
எத்தனையாவது
பிரவிஎன தெரியாது.......
போன பிரவில்
உன்னுடன் நான்
வாழ்ந்த நியாபகம்........
கண்ணாளனே.........
கனவில் நீ வந்தால்.......
கண்ண குளிரக் காணமல்
கண்ணயர்ந்து
தூங்கி விடகூடதென
தூங்காமலே
விழித்திருக்கிறேன்......
ஆம்.......நாளும்
உன் நினைவில்
நானும்......
பசிதிருகிறேன்.....
தனித்திருக்கிறேன்....
விழித்திருக்கிறேன்..
எதற்காக?
என் இனியவனே........
உன் மனைவி என்கிற
'பதவி'காக!

2

காதலியின் வர்ணிப்பு

என்னைப் பத்தி ரெண்டே வார்த்தையில் சொல்லத் தெரியுமா?""எத்தன வேணும்? சொல்…"

"தெரிஞ்ச வரைக்கும் சொல்லுப் போதும்… எனக்குப் பிடிச்சது கிடைக்குதான்னுப் பார்க்கறேன்"

நடக்கும் பூங்கா
ஒளிரும் இசை
கைவீசும் கவிதை
ஓய்வில்லா ஓவியம்
தென்றலின் தேகம்இதயமுள்ள இரக்கம்
பகல் நிலா
கலவரக் கண்வீச்சு
புன்னகைப் பூங்கொத்து
அன்பின் தாய்
நிலவின் நிலவு
பூக்களின் பொறாமை
இரவின் வெளிச்சம்
சிணுங்கும் சிற்பம்
பேசும் மௌனம்
மழையின் மழலை
இசையின் குரல்
காதலின் காதலி
ஐந்தடி ஹைக்கூ
நடக்கும் நதி
அழகின் அகராதி
கொஞ்சும் கோபம்
கவிதைக் கருவூலம்
"இதுல எது உனக்குப் பிடிச்சிருக்கு?"
"ம்ஹும் ஒன்னும் இல்ல"
"ஒன்னுமே இல்லையா?"
"எனக்கு ரொம்பப் பிடிச்சது ஒன்னே ஒன்னு இருக்கு. ஆனா நீ அத சொல்லல"
"அப்படியா? அப்போ உனக்குப் பிடிச்சத நீயே சொல்லு…"
"உன் காதலி!"

1

காதலின் வலி

மின்னல் தெறிக்கப் பார்த்தாய்-
மிச்சம் இன்றித் தொலைந்தேன்.
கன்னம் குழியச் சிரித்தாய்-
கனவில் நழுவிப் போனேன்.
காதல் கற்று தந்தாய்-
காற்றில் கவிதை கண்டேன்.
ஊடல் கொண்டு வதைத்தாய் -
உயிரின் மொத்தம் இழந்தேன்.
பிரிவின் போது சொன்னாய்-
காலம் காயத்தை ஆற்றும்!
*
*
*
காலம் காயத்தை ஆற்றும்!
காதலை..??